நான்

ஜூன் 10, 2008

கண்ணீர்
புனித கவிதைகள் எழுத
தேவையான மனசின் மை
தண்ணீரோடு கலக்கும்
பாச நுரை
பன்னீர் வாசம் பூசும்
சிரிப்பு
வெண்ணீர் கொப்பளங்களில்
பிம்பம் பார்க்கும்
காயத் தழும்புகள்
இறைவன் கை கழுவிய
ஒரு நீர் துளி
நான்!